Tuesday 20 September 2016

எம்ஜியாரின் நன்றி உணர்வு



எம்ஜியாரின் நன்றி உணர்வு 





ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. 

விழா மேடையில் கலைஞர்கள், 
பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக 
மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... 


இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : 
முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். 

இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!

மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!


குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!

திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...
அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : 

"நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும்.


 "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...



திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா 
அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???

ஆனால் எம் .கே .ராதா காலில் விழுவது முதன் முதலில் நீரும் நெருப்பும் படம் ரிலீசான 1971 அக்டொபேர் 18 ஆம் தேதிதான் .













இந்த படம் ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீ மேக் படம் ஆகும் .எம் கே ராதா மதியம் ஷோ பார்த்து விட்டு தியேட்டரை 
விட்டு வெளி வந்து கொண்டிருந்தார் .மழையும் பெய்து கொண்டிருந்தது .அந்த நிலைமையில் கொட்டும் மழையில் 1000 கணக்கான ரசிகர்கள் 

முன்னிலையில் நடந்தது  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி இது ராணுவம் போன்றது .உள்ளே நுழைந்தவர்கள் அனுமதியின்றி வெளியில் வர முடியாது 
அப்படி ஓடி விட்டால் திருட்டு பட்டம் கட்டி போலீசில் சொல்லி விடுவார்கள் .மிரட்டல் ,அடி,உதை தான் .அங்குதான் எம்ஜியார் 

பெண் வேடம் போட்டு நடித்து கொண்டிருந்தார் .அப்போது கந்தசாமி முதலியார் சத்திய பாமாவிடம் உங்கள் பிள்ளைகளை கூட்டி கொண்டு போகலாம் என்றிருக்கிறேன் .அப்படியா தாராளமாய் கூட்டி செல்லுங்கள்.


முதலாளி சச்சிதானந்த பிள்ளை உடும்பு பிடியாய் எம்ஜியாரையும் ,சக்கரபாணியையும் அனுப்ப மறுத்தார் . ஆனால் சத்தியபாமா விடவில்லை .ஆவேசமாய் சண்டை போட்டு விட்டு உங்களால் என்ன முடியுமோ பார்த்து கொள்ளுங்கள் என்று பிள்ளைகளை கூட்டி கிளம்பி விட்டார் .அந்த கந்தசாமி முதலியார் தான் - எம் கே .ராதாவின் தந்தை .சம்பவம் 1930 வாக்கில் நடந்தது  .    





No comments:

Post a Comment