Tuesday 27 September 2016

RAVICHANDRAN ரவிசந்திரன் திரை உலகில் ஆணவத்தால் அழிந்து போனவர்

RAVICHANDRAN ரவிசந்திரன் திரை உலகில் ஆணவத்தால் அழிந்து போனவர் 





ரவிசந்திரன் இயற் பெயர் பி எஸ் ராமன் 

திருச்சியில் படிப்பை முடித்துவிட்டு மருத்துவ கல்லூரியில் சேர சென்னை வந்தார்  அத்தோடு அவர் நாடக  நடிகராகவும் இருந்தார்.

திமுக அனுதாபி  

ஆணையிடுங்கள் அண்ணா மற்றும் உதய சூரியன் என்று இரண்டு நாடகங்களில் நடித்திருந்தார் 


திரை உலகில் இயக்குனர் ஸ்ரீதர் கல்யாண பரிசு படத்தில் பத்மினி மற்றும் சாவித்திரி நடிப்பதற்கு இருந்தது  அதை மாற்றி விஜயகுமாரி சரோஜாதேவி என்று மாற்றி போட்டு படம் வெள்ளிவிழா ஓடியது 

அடுத்து கன்னட நடிகர் கல்யாணகுமாரை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற திகில் படத்தையும் எடுத்தார். கதா நாயகியும் புது முகம் தேவிகா 



அப்புறம் அடுத்து எல்லாமே புதுமுகங்கள் தான் 


எனவே சென்னைக்கு வந்த ராமன் ஸ்ரீதர் உதவியாளரிடம் தன்னுடைய சென்னை ஓட்டல் முகவரி போன் நம்பர் கொடுத்து விட்டு வந்திருந்தார் 


அப்போதெல்லாம் புகை வண்டி 100 கிலோமீட்டருக்குள் தான் பாசெஞ்சாராய் ஓடும் .மெயில் எப்போதாவது தான் 

காலை 11மணிக்கு சென்னை டூ திருச்சி வண்டி  புறப்படும் 
தவறினால் மறுநாள் தான். 


இல்லாட்டி பாசஞ்சர் பிடித்து ரெண்டு மூணு ரயில்  மாறனும் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் ரவிசந்திரன் 


அன்று தான் விதி விளையாடியது 

ஸ்ரீதரை ரவிசந்திரன் சந்தித்தார் 

"மே ஐ கமின்.?"

"உள்ள வாங்க.!"
"இங்க டைரக்டர் யாருங்க.!
நான் ஹீரோ சான்ஸ் கேட்டு வந்துருக்கேன்.!"

"நான்தான் டைரக்டர்.! உக்காருங்க.!"

"தாங்க்ஸ்.!"

சிகரெட் பாக்கெட்டை திறந்த டைரக்டர் "ஹேவ் இட் "என்றார் மரியாதைக்காக.!


வாய்ப்பு தேடி வந்தவர் எந்த தயக்கமும் இன்றி

 "தாங்க்ஸ்."என்றபடி சிகரெட்டை எடுத்துக் கொண்டு விட்டார்.
இருவரும் தம்மடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.நடிகர் 


ஆனால் ஸ்ரீதர் கேள்விக்கு எடக்கு மடக்காகவே பதில் சொன்னார் ஏனென்றால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு 

நடிகர் சிவகுமார் தெரிவு செய்யப்பட்டு இருந்தார் 

தனக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று அறிந்த ரவிசந்திரன் கேட்ட கேள்வி எதற்கும் ஒழுங்கா பதில் சொல்லல வேண்டுமென்றே  திமிராகவே பதில் கொடுத்தார் 


அப்புறம் போன பிறகு அசிஸ்டெண்டிடம் டைரக்டர் சொன்னார்.

"இவன்தான் நம்ம படத்துல ஹீரோ.!"

இப்படிப்பட்ட திமிர் பிடித்த இளைஞன் வேடம் தான் இந்த படத்திற்கு தேவை என்று ஸ்ரீதர் கூறினார் 

No comments:

Post a Comment